புதுச்சேரி : மேட்டுப்பாளையம் பெயிண்டர் கொலை வழக்கில், சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்திரைப்பாளையம், காந்தி திருநல்லுாரை சேர்ந்தவர் அஜித்குமார் (எ) கட்டை,23; பெயிண்டர். இவர், கடந்த 15ம் தேதி இரவு, சாணரப்பேட்டை சுடுகாடு அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் சாணரப்பேட்டை சங்கர்கணேஷ் (எ) சூர்யா,22; சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் நகர் நந்தகுமார், 22; கவுண்டம்பாளையம் சதீஷ் (எ) சாமி 22; மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
விசாரணையில், அஜித்குமாரின் உறவினர் சதீஷ், 25; உட்பட மூவர், கடந்த 2017ம் ஆண்டு நவ. 18 ம் தேதி, வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைதான, சூர்யா, நந்தக்குமார் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அவர்களை கொலை செய்ய அஜித்குமார் திட்டமிட்டார்.இதனை அறிந்த சூர்யா மற்றும் அவரது கூட்டாளிகள் அஜித்குமாரை வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE