புதுச்சேரி : ராஜராஜேஸ்வரி நகரில் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்கு ஜான்குமார் எம்.எல்.ஏ., நடவடிக்கை மேற்கொண்டார்.
காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட ராஜராஜேஸ்வரி நகரில் மழைக் காலங்களில் தண்ணீர் வெளியேறாமல் தேங்கி நின்று, வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக குடியிருப்போர் நலவாழ்வு சங்க நிர்வாகிகள், ஜான்குமார் எம்.எல்.ஏ.,விடம் முறையிட்டனர்.இதையடுத்து, பொதுப்பணித் துறை இளநிலைப் பொறியாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று ராஜராஜேஸ்வரி நகரில் ஜான்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
அங்குள்ள காலி மனை வழியாக இரண்டு குழாய்களை அமைத்து நகரில் தேங்கும் தண்ணீரை நுாறு அடி சாலையில் உள்ள பெரிய கால்வாயில் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.இதற்கான செலவுகளை அப்பகுதியை சேர்ந்த காரை ஓட்டல் உரிமையாளர் வேல்முருகன் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து, குழாய்கள் பதிக்கும் பணி நேற்று துவங்கியது. இந்த பணிகளை ஜான்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுதந்திர பொன்விழா நகர் சங்க தலைவர் எட்வர்டு சார்லஸ், ராஜராஜேஸ்வரி நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE