கடமலைக்குண்டு : வருஷநாடு மலைப்பகுதியில் மழையால் மூலவைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, வெள்ளிமலை உட்பட வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் இருந்து வரும் நீர் வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனுார் வழியாக வைகை அணை சென்று சேரும். ஆற்றில் நீர் வரத்தால் கரைப்பகுதி விவசாய கிணறுகள், குடிநீர் உறைகிணறுகளில் நீர் சுரப்பு அதிகரித்து வருகிறது.----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE