ராமநாதபுரம் : ராமநாதபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்கிக்கிடப்பதால் அலுவலர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்திற்கு பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை, ஜாதிச்சான்றிதழ், வருமானசான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் பொது மக்கள் வந்துசெல்கின்றனர்.இந்நிலையில் போதிய மழைநீர் வடிகால் வசதியின்றி சிறிய மழைபெய்தால் கூட தாலுகா வளாகத்தில் மழைநீர் தேங்கிவிடுகிறது. தனிதாசில்தார்கள் அலுவலகம், இ.சேவை மையத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதி அமைத்து நிரந்தர தீர்வு காண வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE