தேனி : காய்கறி கமிஷன் கடைகளை மீண்டும் தேனி மேற்கு சந்தைக்கு மாற்ற வேண்டும் என ஏலக்கடை உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேனி மேற்கு சந்தையில் செயல்பட்ட காய்கறி தினசரி ஏலக்கடைகள் கொரோனா பிரச்னையால் ஏப். 4 முதல் வீரபாண்டியில் செயல்படுகிறது. அங்கு காய்கறி கொண்டு வருவதில் கூடுதல் செலவு ஏற்படுகிறது . தற்போது உழவர் சந்தை, மார்க்கெட் பழைய இடங்களில் மீண்டும் செயல்படுகின்றன.தேனி ஜான்பென்னிகுவிக் காய்கறி கமிஷன்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் சந்திரன் கூறுகையில் ''தேனி ஏலக்கடைகளுக்கு தேனி, ஆண்டிபட்டி, மயிலாடும்பாறை சுற்றியுள்ள விவசாயிகள் அதிகம் காய்கறி கொண்டு வருகின்றனர்.
முன்னர் குறைந்த வாடகையில் கொண்டு வந்தனர். வீரபாண்டிக்கு கூடுதல் வாடகை செலவு, போதிய பாதுகாப்பு இல்லை. எனவே மீண்டும் தேனியில் செயல்படுத்த கலெக்டரிடம் இரு மனு அளித்துள்ளோம். விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE