காளையார்கோவில் : காளையார்கோவில் அருகே சாத்தனியிலிருந்து ஒய்யவந்தான் செல்லும் தார் ரோடு போடப்பட்ட சில மாதங்களிலேயே சேதமடைந்துள்ளது.
காளையார்கோவில் ஒன்றிய நிர்வாகம் சார்பில் சாத்தனியில் இருந்து ஒய்யவந்தான் செல்வதற்கு 4 கி.மீ., நீளமுள்ள சாலை சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தரமில்லாமல் அமைக்கப்பட்டதால் தற்போது சாலைகளில் பல இடங்களில் சேதமடைந்து போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சேதமடைந்த சாலைகளால் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த வி.மாசானம் தெரிவித்ததாவது: சாத்தனி முதல் ஒய்யவந்தான் வரை சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதால் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. மக்கள் போக்குவரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.இதனை சீரமைக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE