காரைக்குடி : சங்கராபுரம் ஊராட்சிக்கு தனி காவல் நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ., காலனி, போக்குவரத்துநகர், வி.ஏ.ஓ.,காலனி, கே.கே.நகர், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தவிர, தீயணைப்பு நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலக கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது. இப்பகுதி 15கி.மீ., துாரம் உள்ள குன்றக்குடிகாவல்நிலைய கட்டுப்பாட்டில் உள்ளது.சங்கராபுரத்திற்கு தனி காவல்நிலையம் அமைக்க மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE