ஒட்டன்சத்திரம் : 'மழை காரணமாக கண்வலி செடிகளில் உள்ள பூக்கள் மற்றும் கிழங்குகள் அழுகத் தொடங்குவதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக' விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் கண்வலிக்கிழங்கு அதிகம் பயிரிட்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிகிறது. இதனால் நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.தற்போது பருவமழைக் காலத்தில் செடிகளில் உள்ள பூக்களும், கிழங்கும் அழுகி விடுகின்றன. இனிமேல் இச்செடிகளில் இருந்து மகசூல் கிடைக்காது என்பதால், இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர்.
திருமலைக்கவுண்டன் வலசு விவசாயி சுப்பிரமணி கூறுகையில், ''2 ஏக்கரில் பயிரிட்டுள்ளேன். முன்பு மழைபெய்யாமல் கண்வலிசெடிகள் காய்ந்தன. தற்போது மழை பெய்து செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வறட்சியிலிருந்து தப்பிய செடிகள், தற்போது மழையில் வீணாகி வருகிறது. எல்லா வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE