சிவகாசி : 11 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர், துார்வாரப்படாத ஓடை, குடிநீர் பற்றாக்குறை என சிவகாசி மருதுபாண்டியர் தெரு பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
இத்தெரு வழியாக செல்லும் கிருதுமால் ஓடை துார்வாரப்படவில்லை. தெருக்களுக்குள் சாக்கடை துார்வாரப்படவில்லை. 11 நாட்களுக்கு ஒருமுறை சப்ளை செய்யும் குடிநீரும் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. இப்பகுதி சுகாதார வளாகம் முறையான பராமரிப்பின்றி உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தெருவில் தேங்கி விடுகிறது. கிழக்கு தெருவில் சாக்கடை சேதமடைந்துள்ளது. இதே பகுதியில் கைப்பம்பு செயல்படாமல் உள்ளது. குப்பையை குடியிருப்புகளுக்கு மத்தியில் தரம் பிரிப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE