திண்டுக்கல் : விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, திண்டுக்கல் சட்டசபை தொகுதியின் தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் நடந்தது.
துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில் மாவட்ட அவைத் தலைவர் பஷீர் அகமது, துணைச் செயலாளர்கள் தண்டபாணி, நாகராஜன், நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு தலைவர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE