மேலுார் : மேலுார் வெள்ளரிப்பட்டியில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் 37, கொலை வழக்கில் நண்பனுக்காக கொலை செய்த நால்வரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளரிப்பட்டி கோழிப்பண்ணையில் முத்துக்குமரன் இரு நாட்களுக்கு முன் 5 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதில் ஈடுபட்டதாக மதுரை யாகப்பாநகர் மாரிமுத்து 27, ஆலாத்துார் அறிவரசன் 32, நெல்லியேந்தல்பட்டி பாபு 27, வெள்ளரிப்பட்டி விஜய்சுந்தரை 25, போலீசார் கைது செய்தனர். நண்பரை தாக்கியதை தட்டி கேட்ட தகராறில் வெட்டி கொலை செய்தது தெரிந்தது. மதுரை யாகப்பாநகர் மாரிமுத்து தீபாவளியன்று நண்பர் பூபாலனுக்கு வாழ்த்து கூற வெள்ளரிப்பட்டி முத்துக்குமரன் தோட்டத்திற்கு சென்றார்.
அங்கு கட்டிலில் படுத்திருந்த பூபாலனின் நண்பர்களை பூபாலன் என தவறாக நினைத்து மாரிமுத்து முதுகில் தட்ட தகராறு ஏற்பட்டது. ஆனால் அறிவரசனின் துாண்டுதலில் மாரிமுத்து தகராறு செய்வதாக எண்ணிய பூபாலன், முத்துக்குமரன் ஆகியோர் அறிவரசனை தாக்கினர். இது குறித்து மாரிமுத்து விடம் அறிவரசன் கூறியுள்ளார். இருவரும் முத்துக்குமரன் தோட்டத்திற்கு சென்று அவரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE