அந்தியூர்: அந்தியூரை அடுத்த, நகலூர் அருகே, கரடிக்கல் வனப்பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை, ஒரு சிறுத்தை நடமாடியதாக, வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், மலை உச்சியில் ஒரு சிறுத்தை, அங்கும், இங்கும் ஓடும் காட்சி பதிவாகியுள்ளது. இந்நிலையில், நேற்று சம்பவ இடத்தில், வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தையின் கால் தடத்தை உறுதி செய்தனர். எனவே, இப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகள், விவசாயிகள், மக்கள் இரவு நேரங்களில், வெளியில் நடமாட வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE