மொடக்குறிச்சி: கொடுமுடியில் கொடூரமாக கொல்லப்பட்ட, தம்பதியின் வாரிசுகளுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், அதிகாரிகள் நிவாரண நிதி வழங்கினர். கொடுமுடி, சிட்டபுள்ளபாளையம் காலனியை சேர்ந்தவர் ராமசாமி, 57; இவரின் மனைவி அருக்காணி, 56: கடந்த, 14ம் தேதி நள்ளிரவில், இருவரும் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, தந்தை, மகன் உள்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட தம்பதியின் வாரிசுகளுக்கு நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என, எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, எஸ்.பி., தங்கதுரை, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், பெருந்துறை டி.எஸ்.பி. செல்வராஜ், தாசில்தார் ஸ்ரீதர் ஆகியோர், தம்பதியின் வாரிசுகளான, மகன்கள் பூபதி, யுவராஜ், மகள் மேனகா ஆகியோரை நேற்று சந்தித்தனர். மூவருக்கும் தலா, 2.75 லட்சம் ரூபாய் என, 8.25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினர். மேலும் சமையல் பாத்திரங்கள், உணவு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE