ஈரோடு: ஆப்பக்கூடல் தனியார் சர்க்கரை ஆலை, 20க்குள் கரும்புக்கான தொகையை வழங்காவிட்டால், 21ம் தேதி முதல், ஆலையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும், என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி கூறியதாவது: ஆப்பக்கூடலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை, கடந்த அரவை பருவத்தில், விவசாயிகளிடம் வாங்கிய கரும்புக்கான தொகை, 62.25 கோடி ரூபாயை முழுமையாக வழங்காமல் இழுத்தடிக்கிறது. இதுகுறித்து வரும், 20ல் கலெக்டர் முன்னிலையில், ஆலை நிர்வாகத்தினர் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தேதியில் ஆலை நிர்வாகம், 20 கோடி ரூபாய் அளவுக்கு பணம் வழங்கி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், மீண்டும் ஆலை நிர்வாகம் அவகாசம் கேட்டால், 21ம் தேதி முதல் ஆலை முன், மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE