சென்னிமலை: சென்னிமலை அருகே, சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல், போலீசில் சிக்கியது. சென்னிமலை அருகே ஊத்துக்குளி சாலை, சீரங்கம்பாளையம் கிராமத்தில், சேவல் சூதாட்டம் நடப்பதாக, சென்னிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ.,க்கள் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 21 வயது முதல், 31 வயது வரையிலான, 16 பேர் கும்பலை சுற்றி வளைத்தனர். நான்கு சேவல்கள், டூவீலர்கள், கார்களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE