பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, வாணியம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் நடேசன், 50. இவர், உடல்நலக்குறைவால், கடந்த, 11ல் காலமானார். அவருக்கு, மனைவி, இரு மகள், ஒரு மகன் உள்ளனர். இதனால், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இணைந்து, நடேசனின் குடும்பத்துக்கு உதவ முன் வந்தனர். நேற்று முன்தினம், வட்டார கல்வி அலுவலர் மூலம், நடேசனின் குடும்பத்தினரிடம், இரண்டு லட்சத்து, 41 ஆயிரத்து, 500 ரூபாயை, சக ஆசிரியர்கள் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE