சேலம்: 'ஆன்லைன் சூதாட்டத்தால், தற்கொலை உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க, குழந்தைகளிடம், மொபைல் போன் கொடுக்க வேண்டாம்' என, பெற்றோருக்கு, போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, சேலம் மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை, பல்வேறு மக்கள், தங்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றனர். சிலர், திரைப்படங்களை பார்த்து, உடனே பொருளாதார வளர்ச்சி அடைய, குறுக்கு வழியை தேர்வு செய்கின்றனர். குறிப்பாக, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவு, பல்வேறு தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுத்துவிட்டால் அமைதியாக இருப்பர் என்பதால், கொடுத்து விடுகின்றனர். ஆனால், அவற்றை குழந்தைகள் எப்படி பயன்படுத்துகின்றனர் என கவனிப்பது இல்லை. அதனால், மொபைல் போனை கொடுக்காதீர். பெற்றோர் விளையாடினாலும், குழந்தைகள் விளையாடினாலும், இழப்பு குடும்பத்துக்கே. போலீஸ் சார்பில், ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனால், நீங்களும் விளையாடாதீர், குழந்தைகளையும் அனுமதிக்காதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், சேலம் எஸ்.பி., தீபா கானிகேர் உள்பட, அனைத்து மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள், மக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE