தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தர்மபுரி நெசவாளர் காலனியை சேர்ந்த, 7 வயது மாணவி; அதே பகுதியை சேர்ந்த, 35 வயது பெண்; பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ?ஹெச்.புதுப்பட்டியை சேர்ந்த 35 ஆண் உட்பட மாவட்டத்தில் நேற்று, 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று வரை, 5,905 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 5,680 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE