பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த கே.அக்ரஹாரத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் முருகன், 23, பெயின்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, 9:15 மணிக்கு தன் வீட்டிலிருந்து பென்னாகரம் நோக்கி ஸ்பிளெண்டர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது நாகமரை ரவுண்டானா பகுதியில் எதிரே, கூத்தப்பாடியை சேர்ந்த குரு, 38, என்பவர் ஓட்டி வந்த ஆம்னி வேன் அவர் மீது மோதியது. இதில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல்படி, பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE