ஓசூர்: தேன்கனிக்கோட்டை, கோனம்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீதர், 27. விவசாயி; இவரும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான சுதாகர், 22, ரேவேந்திரன், 22, ஆகியோரும், ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் உள்ள கருக்கனஹள்ளி அருகே, கடந்த, 15 மாலை சென்றனர். அப்போது, மூன்று பேர் கொண்ட கும்பல், சாலையின் குறுக்கே பைக்கை நிறுத்தி விட்டு, மது அருந்தி கொண்டிருந்தனர். இதை தட்டிக்கேட்ட ஸ்ரீதர், சுதாகர், ரேவேந்திரன் ஆகியோரை, பாட்டில் உள்ளிட்ட ஆயுதங்களால் அக்கும்பல் தாக்கியது. இது தொடர்பாக, நேற்று முன்தினம் ராயக்கோட்டை போலீசில் ஸ்ரீதர் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், ராயக்கோட்டை அடுத்த கருக்கனஹள்ளியை சேர்ந்த வேலு, 30, வெங்கடாசலம், 33, கிருஷ்ணமூர்த்தி, 32, ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE