ஓசூர்: பேரிகை அருகே, விவசாயி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், 10 பவுன் நகையை திருடி சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த ஏ.செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 45. விவசாயி; இவரது மனைவி சரஸ்வதி, 40; மகன் சதீஷ்குமார், 17; வெங்கடேஷ் தன் குடும்பத்துடன், தன் தோட்டத்துக்கு சென்று நேற்று பணி செய்து வந்தார். பின், மதியம் வீடு திரும்பிய வெங்கடேஷ், வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவில் இருந்த, 10 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாயை திருடிச்சென்றது தெரிந்தது. இது தொடர்பாக அவரது புகாரின்படி, பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவான பதிவுகளை கொண்டு, மர்மநபர்களை ?தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE