சத்தியமங்கலம்: பண்ணாரி அருகே, லாரியை வழிமறித்து துரத்திய, ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், பண்ணாரி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில், யானைகள் நடமாட்டம் உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, சில வாரங்களாக, பண்ணாரி அருகே தேசிய நெடுஞ்சாலையில், தீவனம் மற்றும் குடிநீர் தேடி சாலையோரம் திரிகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு, நேற்று காலை ஒரு சரக்கு லாரி வந்தது. பண்ணாரி அருகே வந்தபோது, ஒற்றை யானை சாலையை வழிமறித்து நின்றிருந்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர் நிறுத்தவே, லாரியை நோக்கி ஓடி வந்தது. இதனால் டிரைவர், லாரியை பின்னோக்கி இயக்கி தப்பினார். பத்து நிமிடங்களுக்கு மேல், சாலையில் நின்ற யானை, வனப்பகுதிக்குள் சென்ற பிறகே, லாரியை ஓட்டிச்சென்றார். ஒற்றை யானையால், அவ்வப்போது இதுபோன்ற பரபரப்பு ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் பீதியுடனே செல்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE