மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்வதால், மேட்டூர் அணை நீர்திறப்பு குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரம் அடைந்த மழையால், நேற்று முன்தினம், வினாடிக்கு, 7,770 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 10 ஆயிரத்து, 392 கனஅடியாக அதிகரித்தது. டெல்டா மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சம்பா சாகுபடி நீர் தேவை குறைந்துள்ளது. அதற்கேற்ப, நேற்று முன்தினம், 3,000 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை டெல்டா நீர் திறப்பு, நேற்று காலை, 8:30 மணி முதல், வினாடிக்கு, 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE