பள்ளிபாளையம்: தார்காடு பிரிவு சாலையில், விபத்தை தடுக்க வேகத்தடை, எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையம் அருகே தார்காடு பகுதியில் பிரதான சாலையிலிருந்து, குடியிருப்பு பகுதிக்கு செல்ல மற்றொரு சாலை பிரிகிறது. இங்கு, வேகத்தடை இல்லாததால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது கடந்த, 14ல், பிரிவு சாலையிலிருந்து வந்த காரும், பிரதான சாலையிலிருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஒரு கார் கவிழ்ந்து ஒருவர் இறந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு, இந்த பிரிவு சாலையில் வரும் போது வாகன ஓட்டிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். வாகனங்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் வருவதால், விபத்தை தடுக்க இங்கு வேகத்தடை, எச்சரிக்கை பலகை, பேரிகார்டு வைக்க நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE