நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, ஒன்றாவது வார்டில், கழிப்பிட வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., ஒன்றாவது வார்டு பகுதியில், 1999வது ஆண்டு பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. 20 ஆண்டுகள் ஆன நிலையில் சேதமடைந்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன், புனரமைத்தாலும், மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் மாறிவிட்டது. இதனால் இப்பகுதி பெண்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மழை காலங்களில் வெளியே செல்ல முடிவதில்லை. எனவே, இப்பகுதியில் தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என, மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். நேற்று, இப்பகுதியை சேர்ந்த மக்கள், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE