கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், மிதமான மழை காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டியில், 30.4 மி.மீ., கிருஷ்ணராயபுரம், 20.2 மி.மீ., மாயனூர், 24 மி.மீ., பாலவிடுதி, 30.4 மி.மீ., மைலம்பட்டியில், 5 மி.மீ., மழை பெய்தது. மழை காரணமாக, இரண்டாம் கட்டமாக அறுவடை செய்யப்பட்ட, மானாவாரி எள் உதிர்க்கும் பணி முடங்கியுள்ளது. வெயில் அடித்தால் மட்டுமே, எள் உதிர்க்கும் பணி நடக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். நெல், வாழை, வெற்றிலைக்கு, மழை நீர் கிடைத்ததால் செழிப்பாக வளர்ந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE