கிருஷ்ணராயபுரம்: திருக்காம்புலியூரில், தெரு விளக்கு பராமரிப்பு பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, திருக்காம்புலியூர் பஞ்சாயத்து சாலைகளில், தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மேட்டுத்திருக்காம்புலியூர் இரட்டை வாய்க்கால் வரை, தெரு விளக்குகளில் பழுது ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், எரியாமல் இருந்த அனைத்து தெரு விளக்குகளையும், பணியாளர்கள் சரி செய்தனர். இதையடுத்து, தெரு விளக்குகள் எரிய துவங்கின. கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE