கரூர்: மோசமான நிலையில் உள்ள, கழிப்பிடத்தை சீரமைக்கவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே, முன்னூற்றுமங்கலத்தில், பொது சுகாதார கழிப்பிடம் பல, ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால், பல மாதங்களாக கழிப்பிடம் பயன்படுத்த முடியாமல், பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், கழிப்பிடம் உள்ள இடங்களை தேடி, செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், கழிப்பிடத்தை உடனடியாக சீரமைத்து, பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE