கரூர்: கரூரில், சுங்ககேட் பகுதியில் கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. கழிவு நீர் கால்வாயில், செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேலும், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும், மழைக்காலங்களில் மழைநீர், சாலையில் செல்லும் நிலை ஏற்படுகிறது. சுகாதார கேட்டை தடுக்க, சுங்ககேட் பகுதியில் செல்லும், கழிவு நீர் கால்வாயை தூர்வாரி, தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE