கரூர்: தீபாவளி பண்டிகை முடிந்து, மூன்று நாட்கள் ஆன நிலையில், திருவள்ளுவர் மைதானத்தில், தற்காலிக கடை அமைத்தவர்கள் போட்ட, குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இதனால், விளையாட்டு வீரர்கள், நடை பயிற்சிக்கு செல்லும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த, 14ல், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்காக, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில், 400க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைத்து கொள்ள, நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து, திருவள்ளுவர் மைதானத்தில் பட்டாசு கடை, ரெடிமேட் ஆடை கடைகள், செருப்பு மற்றும் பெண்களுக்கான அலங்கார பொருட்கள் கடைகள் போடப்பட்டன. கடந்த, 11 முதல், 15 வரை திருவள்ளுவர் மைதானத்தில் வியாபாரம் களை கட்டியது. 15 மாலைக்குள், வியாபாரிகள் தற்காலிக கடைகளை காலி செய்தனர். ஆனால், மைதானத்தில் குவிந்த குப்பை இன்னமும் அகற்றப்படவில்லை. கரூர் மக்கள் காலை, மாலை நேரங்களில் மைதானத்தில் நடைபயிற்சி செல்வது வழக்கம். மேலும், விளையாட்டு வீரர்களும், பயிற்சி மேற்கொள்வர். இந்நிலையில், மைதானத்தில் குவிந்துள்ள குப்பை அகற்றப்படாமல் உள்ளது. எனவே குப்பையை உடனடியாக அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE