ஓசூர்: கெலமங்கலம் அருகே, உயிரிழந்த காளை மாட்டிற்கு, மனிதர்களுக்கு செய்வதைப்போல் இறுதி சடங்குகளை செய்து, விவசாயி குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பூனப்பள்ளியை சேர்ந்தவர் சின்னப்பா, 40, விவசாயி; இவர், கரியன் என்ற பெயரில், காளை மாடு ஒன்றை வளர்த்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும், சுற்றுவட்டாரத்தில் நடக்கும் எருது விடும் விழாவில், இவரது காளை மாடு பங்கேற்று பரிசுகளை தட்டிச்செல்லும். இந்நிலையில், நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடிய அந்த காளை மாடு, நேற்று அதிகாலை, 1:45 மணிக்கு உயிரிழந்தது. வீட்டில் ஒருவராக வளர்ந்த காளை மாட்டை, தன் விவசாய நிலத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்த சின்னப்பா, அதற்கு மனிதர்களுக்கு செய்வது போல் இறுதிசடங்குகளை செய்ய முடிவு செய்து, மேளதாளம், கண்ணீர் அஞ்சலி பேனர், காளையின் உருவம் அடங்கிய கொடிகளை, தன் கிராமத்தில் வைத்து, காளைக்கு இறுதி சடங்குகளை செய்தார். அப்போது, காளை வெற்றி பெற்ற பரிகளையும் அதனுடன் வைத்திருந்தனர். காளை இறந்ததை அறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், காளை மாட்டிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, காளை மாடு அடக்கம் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE