திருப்பூர்:பனியன் நிறுவன வாட்ச்மேன் கொலையில் தொடர்புடைய நான்கு பேரை, வடக்கு போலீசார் கைது செய்தனர்.கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் காஜாமைதீன், 58. வாலிபாளையத்தில் உள்ள நிறுவனத்தில், வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். கடந்த, 15ம் தேதி, வேலை பார்க்கும் இடத்தில் இறந்து கிடந்தார்.திருப்பூர் வடக்கு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். தலையில் பலத்த காயம் இருந்ததால், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், தொழிலாளி ஒருவர் தகராறு செய்து, அவரை கீழே தள்ளிவிட்டது தெரிந்தது.விசாரணையில், புதுக்கோட்டை, மேட்டுப்பட்டியை சேர்ந்த பழனிசாமி, 26, என்பவர், காஜாமைதீனை கீழே தள்ளிவிட்டது கண்டறியப்பட்டது. தனிப்படை போலீசார், அவரை கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'பழனிசாமி, தனது பொருட்களை எடுக்க கம்பெனிக்குள் சென்றார். காஜாமைதீன் எதிர்ப்பு தெரிவிக்கவே, முருகேசன், கார்த்தி, கணேஷ் ஆகியோர் உதவியுடன், அவரை கீழே தள்ளி விட்டனர். இதனால், நான்கு பேரையும் கைது செய்தோம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE