ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பு பேயனாற்றில் குளிக்க சென்ற இளைஞர்கள் மூவர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை 7:00 மணி வரை
கனமழை பெய்தது.இதனால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால்
செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோயில் ஓடையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வந்த நிலையில் கோட்டைபட்டியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் செண்பகதோப்பு பேயனாற்றில் குளிக்க சென்றனர்.
அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கண்காணிப்பு இல்லாத அத்தித்துண்டு வன சோதனை சாவடி அருகில் உள்ள பேமழையாள் கோயில் பின்புறம் வழியாக வரும் பேயனாற்றில்
குளிப்பதற்கு இறங்கினர்.இதில் தண்ணீரின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல்
கோட்டைபட்டியை சேர்ந்த கோபி 25, பால்பாண்டி 25, முத்து ஈஸ்வரன் 24 ஆகியோர்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
தீயணைப்பு, போலீஸ், வருவாய் துறையினர்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இரவு 8:00 மணி கடந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பகுதியில் மின் விளக்குகள் அமைத்து தொடர்ந்து தேடி வருகின்றனர். கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE