திண்டிவனம்; கோட்டக்கரை காலனிக்கு செல்லும் சிமென்ட் சாலை படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வானூர் வட்டம் ஆரோவில் அருகில் கோட்டக்கரை காலனி அமைந்துள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் சென்று வரும் பிரதான சாலை படுமோசமாக உள்ளது.கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது, இந்த சாலை ஆங்காங்கே பெயர்ந்து, சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மழை நீர் வெகு நாட்களாக தேங்கியுள்ளதால், கொசு உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை சீர் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE