புதுடில்லி: டில்லியில் காணாமல் போன 76 குழந்தைகளை, 3 மாதங்களுக்குள் கண்டுபிடித்த சீமா டாக்கா என்ற பெண் போலீசுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது.
டில்லியில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் போலீசாருக்கு புதிய ஊக்க திட்டம் ஒன்றை, கடந்த ஆக., மாதம் டில்லி காவல்துறை அறிவித்தது. இத்திட்டத்தில், 12 மாதங்களுக்குள், 50 குழந்தைகளுக்கு மேல் கண்டுபிடிக்கும் போலீசாருக்கு, பதவி உயர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைமைக் காவலர் சீமா தாகா என்பவர், கடந்த 3 மாதங்களுக்குள், காணாமல் போன, 76 குழந்தைகளை கண்டுபிடித்து அசத்தி உள்ளார். இதில் 50 குழந்தைகள் 14 வயதுக்கும் குறைவானவர்கள். டில்லி தவிர, பஞ்சாப், மேற்குவங்க மாநில குழந்தைகளும் இதில் அடக்கம். குழந்தைகளை கண்டுபிடிக்க கடந்த 3 மாதங்களாக அவர், பல்வேறு இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டு குழந்தைகளை மீட்டுள்ளார்.

சீமாவுக்கு வாழ்த்து தெரிவித்த டில்லி போலீஸ் கமிஷனர், அவருக்கு பதவி உயர்வு வழங்கி கவுரவித்தார். புதிய ஊக்கத் திட்டத்தின்கீழ், டில்லியில் முதல் பதவி உயர்வு பெறுபவர் சீமா என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE