ஆவடி- ஆவடியில் சுவரின் துவாரத்தில் சிக்கிய தெருநாயை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.ஆவடி, ராஜிவ் காந்தி நகர், கார்டன் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 45. இவர், நேற்று காலை நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்து வெளியே சென்று பார்த்தார்.அப்போது, எதிர் வீட்டு சுவரில் பொருத்தப்பட்ட, பி.வி.சி., குழாயில், தலையை விட்டு வெளியே வரமுடியாமல் தெருநாய் ஒன்று திணறியது. இதனால், அவர் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், சுவரில் இருந்த குழாயை அகற்றி, சுவரை இடித்து நாயை மீட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE