புதுடில்லி: 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என சி.பி.எஸ்.இ., செயலாளர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கபடாமல் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படுமா என கேள்வி எழுந்தது.

இதனிடையே சி.பி.எஸ்.இ., செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் எனவும் தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE