சென்னை:அரசு, 'இ -- சேவை' வெறும் காகித அளவில் இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.நீலகிரி மாவட்டம், மசினகுடியில் மதுக் கடைகள் துவங்க எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில், ஜெயினுலாபுதீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இம்மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ், ''மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதியில், மதுக்கடை திறக்கும் திட்டம் இல்லை,'' என்றார்.
செப்டம்பரில் அளித்த மனு மீது உத்தரவு பிறப்பிக்காததால், இந்த வழக்கை தாக்கல் செய்ததாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, 'பொதுமக்களின் மனுக்களுக்கு, அதிகாரிகள் உடனடியாக பதில் அளிப்பது இல்லை. மக்களின் கோரிக்கைகளுக்கு, உடனடி பதில் அளித்தால், அதிக அளவில் வழக்குகள் தாக்கல் செய்யும் நிலை இருக்காது.குறைகளுக்கு தீர்வு காண, அரசு அறிமுகப்படுத்திய இ -- சேவை, காகித அளவில் உள்ளது' என, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.பின் வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE