கமுதி : கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் நுழைந்த புள்ளிமானை நாய் கடித்ததில் கழுத்தில் காயமடைந்து காந்தி என்பவரின் வீட்டில் தஞ்சம் புகுந்தது. வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதேபோல் பறையங்குளம் கிராமத்தில் நாய்களால் கடிக்கப்பட்ட புள்ளிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் மானை அலுவலக வளாகத்தில் புதைத்தனர்.எனவே மழைக்காலங்களில் வரும் புள்ளிமான் வகைகளை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE