திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே செல்லும் திருமயம், மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் கிராமங்கள் அருகே விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன.
இக்கிராமங்களுக்கு அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சர்வீஸ் ரோடு போடப்பட வில்லை. மேலும் தடுப்புச் சுவர்கள் கூட எழுப்பவில்லை. இதனால் நேரடியாக கிராமத்து விலக்கு ரோடுகள் தேசிய நெடுஞ்சாலையில் சந்திக்கின்றன.இதனால் விபத்துக்கள் நடந்தாலும் மாற்றப்படவில்லை. மேலும் வயல்களில் மேய்ந்து விட்டு செல்லும் கால் நடைகள் தேசிய நெடுஞ்சாலைவழியாகவே குறுக்கே கிராமச்சாலைக்கு செல்கின்றன.
இதனால் ரோட்டில் கால்நடைகள் நட மாட்டம் அதிகரித்துள்ளன.இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அச்சம் ஏற்படுகிறது.இரவில் விபத்துக்களும் நேரிடுகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து, சர்வீஸ் ரோடு போட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE