கூடலுார்: கூடலுாரில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் தேனீக்கள் அறக்கட்டளை சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது, மரக்கன்றுகள் அதிகம் நடுவது, பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் பாண்டியன், அழகேசன், பாண்டி, ஜெயக்குமார், பிரகலாதன், திராவிடமணி, அழகு, அருண்குமார், செந்தில், புகழேந்தி, செல்வராஜ், வல்லவன், அன்புராஜ் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE