ஊட்டி:நீலகிரியில், 4 பேர் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு அரசாணை நிறைவேற்றியது. 'இதன் மூலம் எம்.பி.பி.எஸ்., படிப்பில், 313 இடங்களும், பி.டி.எஸ்., படிப்பில், 92 இடங்கள்,' என, மொத்தம், 405 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், 20-20-21ம் கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியுள்ளது.அதில், நீலகிரியில், அம்பலமூலா அரசு மேல்நிலை பள்ளி மாணவர் நித்தின்; கூடலூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவி தாரா; மஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளி மகிதா மற்றும் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்த பழங்குடியின மாணவி பிரியா ஆகியோர் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE