நியூயார்க்:'பயங்கரவாதம் ஒழிந்தால் மட்டுமே, ஆப்கனில் அமைதி திரும்பும்' என, ஐ.நா., வில் இந்தியா தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட, பாதுகாப்பு கவுன்சில் என்ன செய்ய வேணடும் என்பது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையில் விவாதம் நடந்தது. சொர்க்க பூமிஇதில், ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர், டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:பயங்கரவாதமும், அமைதி நடவடிக்கையையும், ஒரு சேர பயணிக்க முடியாது. ஆப்கனில் அமைதி ஏற்பட வேண்டும் என்றால், பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
துரந்த் எல்லைக் கோடு பகுதியிலிருந்து, ஆப்கனில் பயங்கரவாதம் ஊடுருவுவதை முதலில் தடுக்க வேண்டும். இந்தப் பகுதி, பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக இருப்பதை ஒழிக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக பாதுகாப்பு கவுன்சில் செயல்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
எல்லைக் கோடுஆப்கனையும், பாகிஸ்தானையும், 2,640 கி.மீ., நீள துரந்த் எல்லைக் கோடு தான் பிரிக்கிறது. பாகிஸ்தானிலிருந்து, ஆப்கனில் பயங்ரவாதம் ஊடுருவதை தடுக்க வேண்டும் என்பதை தான், இந்தியத் துாதர், மறைமுகமாக குறிப்பிட்டதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE