புதுடில்லி:கொரோனா பாதிப்பை கண்டறிய, நேற்று வரை, 13 கோடிக்கும் மேலானோரிடம் பரிசோதனைகள் நடந்துள்ளன. வைரஸ் பாதிப்பில் இருந்து, 84.78 லட்சம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
உயர்வு
கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், 46 ஆயிரத்து, 232 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், நாட்டில் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, 90 லட்சத்து, 50 ஆயிரத்து, 597 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில், 4.40 லட்சம் பேர், சிகிச்சை பெறுகின்றனர்; ஒட்டு மொத்த பாதிப்பில் இது, 4.86 சதவீதம். வைரஸ் பாதிப்பில் இருந்து, கடந்த ஒரே நாளில், 49 ஆயிரத்து, 715 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை, 84 லட்சத்து, 78 ஆயிரத்து, 124 ஆக அதிகரித்துள்ளது; மீட்பு விகிதம், 93.67 சதவீதமாக உயர்ந்துஉள்ளது.
கொரோனா பாதிப்பால், கடந்த, 24 மணி நேரத்தில், 564 பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்டிராவில், 155; டில்லியில், 118; மேற்கு வங்கத்தில், 50; கேரளாவில், 28; ஹரியானாவில், 25 இறப்புகள் பதிவாகி உள்ளன
இறப்பு விகிதம்
இவர்களுடன், வைரஸ் பாதிப்பால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து, 32 ஆயிரத்து, 726 ஆக அதிகரித்துள்ளது; இறப்பு விகிதம், 1.47 சதவீதம்.
பலி எண்ணிக்கையில், 46 ஆயிரத்து, 511 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, 11 ஆயிரத்து, 624 பேருடன் இரண்டாம் இடத்திலும், தமிழகம், 11 ஆயிரத்து, 568 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.கொரோனா பாதிப்பை கண்டறிய, 24 மணி நேரத்தில், 10.66 லட்சம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.இவர்களுடன், இதுவரை பரிசோதனைக்கு உள்ளானோர் எண்ணிக்கை, 13 கோடியை கடந்துள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE