சண்டிகர்:பஞ்சாபில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து நடத்தும் போராட்டத்தை, நாளை முதல் கைவிட, விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் தீவிரம்அடைந்துள்ளன. விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் இணைந்து, ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து, 'தர்ணா' போராட்டம் நடத்தி வருவதால், ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 1,670 கோடி ரூபாய் அளவிற்கு, மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள தொழிற்சாலைகள், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, இழப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் விடுத்த அழைப்பை ஏற்று, விவசாய சங்கத் தலைவர்கள், அவருடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுக்குப் பின், ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து நடத்தும் போராட்டங்களை, நாளை முதல் நிறுத்திக்கொள்வது என, முடிவு எடுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE