அனுப்பர்பாளையம்:திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனியில் சரக்கு ஆட்டோவுக்கு தீ வைத்ததாக வாலிபர் போலீசில் புகார் செய்துள்ளார்.-திருப்பூர், நெசவாளர் காலனி காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி, 20, இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து பழ வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை வீட்ட முன் நிறுத்தி இருந்தார். காலையில் பார்த்தபோது, ஆட்டோவின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்திருந்தது. இது குறித்து, அவர் திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE