திருப்பூர்;'சளி மாதிரி சேகரம் வேண்டாமே' என, மக்கள் கொரோனா பரிசோதனையைத் தவிர்ப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, 19 இடங்களில் சளி மாதிரி சேகர மையம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, திருப்பூர் மாநகராட்சியில் ஒரு நடமாடும் மாதிரி சேகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.அதேநேரம், காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டும் வருகின்றன. அவ்வகையில், தொற்று அறிகுறிகளுடன் வருபவர்கள், தானாக பரிசோதனை செய்து கொள்பவர்கள் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.அதேநேரம் அவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களிடமும் சளி மாதிரி சேகரம் செய்யப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. தற்போது, நோயின் தாக்கம் குறைந்துள்ளதால், மக்களிடையே கொரோனா பாதிப்பின் அச்சம் நீங்கியுள்ளது. இதனால், 'சளி மாதிரி சேகரம் வேண்டாமே' என, மக்கள், கொரோனா பரிசோதனையைத் தவிர்த்து வருகின்றனர்.சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'கொரோனா தொற்று உள்ள பகுதிகளில், வீடு வீடாக சென்று, பரிசோதிக்கப்படுகிறது. அனைவரிடமும் சளி மாதிரி சேகரம் செய்யப்படுகிறது. நோய் தொற்று பாதிப்பு குறைவால், சளி மாதிரி சேகரம் செய்ய மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதனால், விருப்பத்தின் பேரில் உள்ளவர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE