கோவை;கோவையில், இதுவரை 46 ஆயிரத்து 35 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று, 148 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 47 ஆயிரத்து, 380- ஆக உயர்ந்தது. நேற்று இரு ஆண்கள் இறந்தனர். இதுவரை 597 பேர் பலியாகியுள்ளனர்.கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 190 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 46 ஆயிரத்து, 35 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 748 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE