சென்னை: தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு, வரும், 25 முதல், பஸ் போக்குவரத்து துவங்க உள்ளது.
கொரோனா ஊரடங்கின் போது தடை விதிக்கப்பட்ட, மாநிலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை, மீண்டும் துவங்க, மத்திய அரசு, செப்டம்பர், 7ல் அனுமதித்தது.
எனினும், கடந்த மாதம், 31 முதல் புதுச்சேரிக்கும், இம்மாதம், 16 முதல், கர்நாடகாவுக்கும், தமிழகத்தில் இருந்து, 'இ- - பாஸ்' இல்லாமல், தனியார் மற்றும் அரசு பஸ்களை இயக்க, தமிழக அரசு அனுமதியளித்தது.இந்நிலையில், ஆந்திர அரசு கோரிக்கையை ஏற்று, ஆந்திரா - தமிழகத்துக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, இ- - பாஸ் இல்லாமல், இரு மாநிலங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து, வரும், 25 முதல் துவங்க உள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE