மும்பை: கொரோனா வைரஸ் இரண்டாவது அலை, சுனாமி போல இருக்கலாம் என மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி நம்மிடம் இல்லை. அதற்கான உரிய சிகிச்சையும் இல்லை. டிசம்பரில் கொனேரா தடுப்பு மருந்து வந்தாலும், அது மஹா.,வுக்கு எப்போது வரும் என தெரியவில்லை. மாநிலத்தில் வசிக்கும் 12 கோடி மக்களுக்கும் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட வேண்டும். மொத்தம் 25 கோடி தடுப்பூசி தேவை என்பதால் அதற்கு காலமாகும். எனவே அதுவரை, வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் அதிகம் கூடக்கூடாது.

மீண்டும் ஊரடங்கு வேண்டாம். எனது 5 ஆண்டு கால ஆட்சி முழுவதையும் ஊரடங்குடன் நிறைவு செய்ய விரும்பவில்லை. விநாயகர் சதுர்த்தி, தசரா போன்ற பண்டிகைகளை கட்டுப்பாடுடன் கொண்டாடினோம். தீபாவளி பண்டிக்கைக்கும் பட்டாசு வெடிக்க வேண்டாம் என நான் கூறியதை பொதுமக்கள் பின்பற்றினார்கள். கொரோனா முடிந்து விட்டது என யாரும் எண்ண வேண்டாம். வைரசின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை சுனாமி போல மிகவும் ஆபத்தானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE